Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் கொரோனாவுக்கு பலி

மே 31, 2021 12:01

ஆமதாபாத்: குஜராத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த கட்ச் சமஸ்தானத்தின் மகாராஜா மகாராவ் மூன்றாம் பிராக்மல்ஜி, கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85.

புஜ் நகரில் உள்ள அரண்மனை சுடுகாட்டில் கொரோனா நடைமுறைகளின்படி அவரது இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அவருடைய மனைவியான மகாராணி ப்ரீதி தேவி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மகாராஜாவுக்கு குழந்தைகள் இல்லை. அவர் யாரையும் வாரிசாக நியமிக்காததால், மகாராஜா பட்டத்துக்கு காலியிடம் ஏற்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்